kamani kavithaigal


பழிதீர்க்க உடைவாளை....


புத்தரை பூஜிக்கும்
லாமாக்களின் உதடுகள்
சரணம் சொல்லி
மகிழாமல் - தமிழரின்
மரணம் சொல்லி
மகிழ்ந்தது.

அசோகனின் சக்கரம்
அடக்க முடியாமல் சுழன்று
ஆயிரக்கணக்கான
தமிழர் உயிர்களை
குடித்தது.

கங்காருவின் பையில்
குட்டிக்கு பதிலாய்
குண்டுகள் நிரப்பப்பட்டன.
அது எகிறி குதித்ததில்
எரிந்த உயிர்கள்
சிதைந்த உடல்கள்
சிலுவையை
வெட்கப்பட வைத்தது.

உரிமை வாழ்வை
சிறை மீட்க
உயிரிழந்த போராளிகள்
உரிமையின்
அடையாளமானார்கள்.
மிருக வேட்டை
முடிவடைந்து
தமிழர் வேட்டை
தொடங்கியது.

புத்தன் பெருமை
சொல்லிய பூமி
மகிந்தாவால்
தமிழர் ரத்தப்
பெருமையால்
நிறைந்தது
ஈழ மண்ணில்.

தலைமறைவாய்
தணலில் நின்று
தம் மக்கள் காக்கும்
களபலியாய் மாவீரர்கள்
மகுடம் தரித்தார்கள்.

லட்சியம் காக்க
தம் உயிரை
அலட்சியம் செய்த
மறவர்களின்
ஈக பூமியாய் எமது
தமிழீழ மண்.

கருத்து சொன்னால்
கருப்புச் சட்டம்
காந்தி தேசத்தின்
நடைமுறையானது.
பேசும் உரிமைமீது
சட்டத்தின் தேர்கால்கள்.
எழுதும் கோலின்மீது
ஏவலரின் அடக்குமுறைகள்.

பிரார்த்தனைகளும்
வாழ்த்துக்களும்
எழுதுவதற்கே
விற்பனையானது
பேனாக்கள்.
அடக்குமுறைக்கெதிராய்
தலைசாய்க்கும்
பேனாக்கள்மீது
தடுப்பு சட்டம்
தாவி மிதிக்கும்.

புலம்பலுக்கு
முற்றுப் புள்ளியாய்
புறப்பட்டது
ஒரு போர் வாள்.
அடக்குமுறைக்கு
பழிதீர்க்க உடைவாளை
உடைமையாக்க
கூவி அழைத்தது.

இன்னுமாய் விழுந்துகிடக்க
தமிழினம் அடிமையல்ல.
உறைவிட்டு கிளம்பட்டும்
உடைவாள்.
உடைவான் பகைவன்
எழும் தமிழீழம்!!!

பதிவு: கண்மணி

மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்

prabhakaran poems kavithaigal


நாம் அணிவகுத்துள்ளோம்...


நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்



(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)

engal thalaivar mama varuvaar



படை தலைவன் வருவான்!!


குருதித் துளிகள்

அணி வகுக்கும்

அன்னியனுக்கெதிராய்.

பகைவனே - உன்

பஞ்சணையின்கீழ்

எம்மின பிஞ்சுக்

குழந்தைகளின் சதைகள்

புதைக்கப்பட்டிருக்கிறது.

எமது மாவீரர்

எலும்புகளால்

பூட்டப்பட்ட

உம் கட்டிலின்

கால்களுக்கு

இறுதிக் கதை

எழுதப்படும்.


புரிந்துக்கொள்!

விம்மி அழுத

எம் குலப்பெண்களின்

அழுகைச் சத்தம்

உம் அழிவுக்கு

விடுத்த எச்சரிக்கை.


களமாடிய

எம் தீப்பந்தங்களின்

நெருப்புத் துளி

உன்னை எரிக்கும் காலம்

நெருங்குகிறது.

அடங்க மறுக்கும்

புலிகளின் கூட்டம்

உம்மை எதிர்க்கத்தான்

விரும்புகிறது.


இரவை விழுங்கும்

பகலைப் போல

எம் பகையை விழுங்கும்

தலைவர் படை.

புதைத்த இடத்தில்

துளிர்விடுவோம்.

நாங்கள்

இருளை கிழித்து

ஒளி விடுவோம்.

அடக்குமுறைக்கா

பயப்படுவோம்?

அடடா... எழு

நாம் புறப்படுவோம்.

வலியும், அழுகையும்

நமக்கு தவம்.

விடுதலையும்

மகிழ்ச்சியும்

அதன் வரம்.


விடுதலை

கரு சுமந்த

தாயாய்

எம் தலைவன்,

எம் இனத்தின்

வலி சுமந்தான்.

காலங்களின் வரிசையில்

அவன் நிகர் ஒப்பார் யார்?

நம்மை, நமக்கு

அடையாளம் காட்டியவன்.

நமக்கு விடுதலையை

பாலாய் ஊட்டியவன்.

அச்சத்தை வீழ்த்தி,

அரணாய் நின்றவன்.

அரக்கர் படைக்கு

எமனாய் ஆனவன்.


மிச்சமாய் ஒரு தமிழன்

இருக்கும் வரை

நிச்சயமாய் எமது போர்

தொடரும்.

பகைவனுக்கு மொழி

பெயர்த்துச் சொல்லுங்கள்.

எம் படை தலைவன்

வருவான் என்ற சேதியை...!!


உருவாக்கம் : கண்மணி
மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்

wanted criminals in india duclos devananda,thedapadum kutravaali since 1990's





நீயா தமிழனின் பிள்ளை?


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை

சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன்

வீட்டுக்கே

தோரணம் ஆனது வாழை! - நீயும்

நாட்டினில் உன்னை அழித்தவன்

காலையே

நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த

பகைவனை

கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! -

அவன்

சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ

நீ

சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய்

உன்

தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட

ஆயிரம் பெருமை படைத்த உன்

அன்னை மண்

அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில்

தமிழ்வானில்

இன்னொருவன் கொடி பறக்கும்! - அட

நன்றடா நன்று! இருந்துபார் உன்

மண்ணில்

நாளை அவன் பிள்ளை பிறக்கும்..!!


வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் : கவிஞர் காசி ஆனந்தன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

ulaga magalir thinam,pengal naal



"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்." -
-வேலுப்பிள்ளை பிரபாகரன்.


பெண் என்னும் பூகம்பம்

துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.

போராளியான பெண் ஆணுக்கு நிகராக
அனைத்திலும் மிளிர்கிறாள்;
அல்லாதவள்……
அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள்.
புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள்
பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம்
சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும்
புதையுண்டு கிடக்கிறோமே…...
வேண்டாமென்று சொல்லவில்லை
வீறு கொண்டெழுந்து…..
வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள்
சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே.

அன்னையமும் அதை மேவும் பெண்ணியமும்
காலச்சுழிக்குள்ளே காணாமல் போனதுவோ?

வங்காலைச் சிறுபெண்ணின் வலி நிறைந்த கொலை அறிந்தும்
கண் காணா நிலையென்றா கனல் எடுக்க மறந்தோம்?
செந்தாழம் சிதைந்தாற்போல் சிறு தேகம் கிடந்தநிலை
செவ்விழிகள் மொய்த்து எங்கள் சிந்தைக்குள் புகவில்லையா?

பெண்ணியம் பேசி பெருமைகளைக் குவிப்போரே!
கண்ணிய வாழ்வுக்கேங்கும் ஈழப்பெண் கண்ணீரைக் களமேற்றும்!
கண்ணென்றும், கனியென்றும் கவி கொஞ்சில் கொதிப்போரே!
பெண்களைக்……காடை அங்கே கசக்குகிறான்.
காணாமல் கிடப்பது ஏன்?

அல்லைப் பிட்டிக்காய் அழுத கண்ணீர் காயவில்லை
ஆயிரம் அமைப்பிருந்தும் ஐ.நாவின் அம்பலத்தில் ஏறவில்லை
வங்காலை தொடர்கதையாய் வலியின் வரவெழுதி
எங்கால அடுத்த இடியென இதயத்தில் வலித்திருக்க
சொல்லி வைத்தாற்போல வல்லிபுன முன்றலிலே
வானரக்கர் குண்டு போட்டர்.
எண் எட்டின் பெருக்கத்தை எமன் தின்று சென்றான்.
கண்ணுற்றும், காற்றுவழி சேதி கேட்டும்
எண்ணிக்கையற்று எரிமலையாய் எழுந்தோம்….
பின் என்ன?
ஓர் மாதம் கடக்கு முன்னே மல்லாக்கப் படுத்துவிட்டோம்.
அன்றங்கு பட்ட அடி இன்றும் புற்றெடுத்து புரையோடிக்கிடக்கிறது.
மருத்துவப் பெயராலே சிங்களத்தின் மரணப்பரிசுபெற்ற
சின்னப் பெண்ணுடல் சிதையேற்ற முடியாமல் சீரழிந்து அலைகிறது.
ஆதிக்கக் கூப்பாடு அணுதினமும் ரணமாடி அன்னையர் விழியேறி
கண்ணீர்க் கடல் தோண்டுகையில்
பன்னீர்க்குளியலிட்டு பைந்தமிழ்க் கன்னியர்கள்
பக்குவமாய் உள்ளரென பாரெங்கும் பறையறைந்து
சங்கரி முதற்கொண்டு எட்டப்பச் சண்டாளர் சாட்சி சொல்வர்
நாங்களும் கேட்போம், திகைப்போம்…
பொய் என்று பொருமுவோம். பிறகொன்றும் செய்யமாட்டோம்.
மூலைக்குள் முடங்கி முகட்டு விட்டம் பார்ப்போம்
காலங்காலமாக இதுதானே நடக்கிறது.

நாளாந்த நகை மாற்றம். அலங்காரப் பொருட் தேட்டம்
தாயகத்தை விலத்திய தாயகமாய் உலவுகிறோம்.
கார்காலப் பொழுதுகளில் கன்னச் சிவப்பெழுதி
போர் மூண்ட பூமியின் பெருந்துயர் மாற்றவெண்ணா…மாதராய்
முல்லைச் சிரிப்போடு மிடுக்கோடு நடக்கிறோம்.
அக்கையும், தங்கையும் பக்கத்து வீட்டுப் படித்த தோழியும்
சீண்டும் பகை நடுவே….
மானத்தை வேண்டி தினம்தினம் தீக்குளிக்கும் பொழுதுகளில்
வரு…..மானத்தைத் தருமென்றாலே அதைப்பற்றிப் பேசுகிறோம்.

வாதையுற்ற இராணுவ வல்லுறவால் சீவன்விட்ட,
வலியுற்று மனம் நலிந்த பேதையான பெண்களுக்காய்
கோதையர்கள் தனியெழுந்து மேதினியை உலுக்கினோமா?
முக்காடு போட்டுக் கொண்டு பெண் என்னும்
முகம் தொலைத்து முடங்கி விட்டோம்.

துணிவிருந்தால் துயர் அகலும்.
எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும்.
ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக
பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்
சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை.


ஆக்கியவர் : சகாறா
பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்

karumpulikal uyir ayutham


குமுறி எழடா..!!


உன்னை எடுத்தெறி தமிழா!

ஒதிய மரம்போல் நின்றனை பேடி!

அன்னை துடித்திடல் அழகா?

அவள் படுந்துயர் எத்தனை கோடி!

தன்னை மறந்தொரு வாழ்வா?

தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?

முன்னைக் கதைகள் அளப்பாய்....

முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?

மேடையில் தமிழ்விழா வைப்பாய்!

மேனிசிலிர்க்க வெறும்வாய்

பிளப்பாய்!

ஓடைத் தவளைபோல் கத்தி

உலகில் என்னதான் பண்ணிக்

கிழிப்பாய்?

பாடை உடன்கொண்டு வாடா!

பகைவன் களத்தே விழப்பாய்!

அழிப்பாய்!

பீடை தொலைவதெந்நாளோ?

பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய்

விழிப்பாய்!

எட்டி உலகினை நீ பார்!

எங்கும் விடுதலை வாழ்வே

இருக்கும்!

கட்டி உனைமட்டும் போட்டார்!

கைவிலங்கென்று நொறுங்கிப்

பறக்கும்?

தட்டி எழுக உன் தோளை!

தாவுக போரில்! இத்தாய்மண்

சிரிக்கும்

கொட்டி நிறைத்திடு குருதி!

குமுறி எழடா....

விடுதலை பிறக்கும்.


வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் : காசி ஆனந்தன்

major thanigaimaran


தமிழீழம்
18.04.1995


என் பாசமிகு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது.


ஜெயமலர், நான் கரும்புலியாகச் சென்று வீரச்சாவடைந்தயிட்டு
கவலைப்படக்கூடாது. ஏனெனில் நாம் இருவரும் ஒரு வரலாற்றுத் தலைவனின் வழி காட்டலில் நிற்கின்றோம். இழப்புக்கள் எமக்கு புதியவை இல்லை.இழப்புக்கள்
இல்லாது எம் தமிழீழத்தை வென்று எடுக்க முடியாது என்பதை நீ
படித்திருப்பாய்.

மற்றும் நீ எனது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.நீ இயக்கத்தை விட்டு
விலகக்கூடாது இதுதான் நீ செய்யும் ஆத்மா சாந்தியாகும்.


இப்படிக்கு,
தணிகைமாறன்,
(அன்ரன் பெனடிற்).

பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

wimal weerawansa feasting drama


கொலைகாரர்களின் கொட்டம் அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..
கொலைகாரன் ராஜபக்சே உடன் கொலைகாரன் விமல்..

விமலின் பயங்கர(இன)வாத உண்ணாவிரதம்

ஓ ! தமிழர்களே!! நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் தானா? ஆயுதப் போராடடம் வேண்டாம். அமைதி வழியில் நமது எண்ணத்தை கருத்தை வெளியிட வேண்டாமா? தமிழகத்தில் முத்துக் குமாரும், இதே ஐக்கிய நாடுகளின் முன்பு முருகதாசனும் தீக் குளிக்கவில்லையா? அவர்கள் அநியாயத்திற்கு ஆதரவு தேட உண்ணாவிரதம் இருக்கும் போது, நியாயமான விசாரணைக்காக அமைதி வழியில் குரல் கொடுக்க வேண்டாமா? அச்சமா? அப்படியானால் அரசியல் பின்னணியற்று மக்கள் எழுச்சியாக சட்டத்திற்கு உட்பட்ட முறையில் மேற்கண்ட கருத்தை எழுத்தில் அந்தந்ந நாட்டு மொழியில் எழுதிக் கையளியுங்கள்

tamil civilian killed in srilanka by srilankan army

தமிழன் என்று சொன்னாலே கொலை செய்கிறார்கள்..
என்னை காக்க முடியாத உங்களுக்கு உலக செம்மொழி ஒரு கேடா...?







lt.colonel nilavan poems kavithaigal





தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

vedaranyam fisherman sellappan killed by srilankan army meenavar thuyaram


வேதாரண்யம் மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினால் கொல்லப்பட்டுள்ளார். இரும்புக் கம்பியால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிப்பதாக இந்திய கடற்படை இலங்கை சென்றுள்ளது. இரும்புக் கம்பியை கையாளும் பயிற்சி. செல்லப்பன் அடிவாங்கி, சித்ரவதைப்பட்டு, கொல்லப்பட்டதற்கு 3 லட்சம். கொன்றவனுக்கு பயிற்சி. தமிழக மக்களுக்கு எப்பொழுதும் போல் அறிக்கைகள். நாளை இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் செய்வது தி.மு.க மீனவர் அணி. கொஞ்ச நாட்களாக போராடிக்கொண்டிருந்த அமைப்புகளும் அடங்கி விட்டது. போராட்டக்காரர்களும் ஓய்ந்து விட்டனர். புதிதாக எந்த அமைப்பும் உருவாவதற்கு முன் ஆட்சியாளர்களே சம்பளம் வாங்கிய போராட்டத்தை நடத்துகின்றனர். நமது போராட்ட அமைப்புகளும் IIFA போன்ற INTERNATIONAL பிரச்சனைகளை மட்டும் தான் பேசுகிறார்களே தவிற சேரிப்பிரச்சனைகளை பேச மறுக்கிறார்கள். அரசாங்கம் தன் முத்தரப்பு அரசியலை சாமர்த்தியமாக நடத்துகிறது. என்ன தான் செய்வது?.

LinkWithin

Related Posts with Thumbnails